இதன்படி டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பிராந்தியங்களில் ரஷ்யாவால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகின்றது. இங்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நாளை தேர்தல் முடிவடைகின்றது. உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷ்யாவின் செயல்பாடு சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் ஆகும். தீவிரமாக போர் நடத்தும் பகுதிகளில் ரஷ்யா வாக்குப்பதிவை நடத்தவது உக்ரைன் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வாக்கெடுப்பின் முடிவுகளை மற்ற நாடுகள் அங்கீகரிக்க வேண்டாம்” என்று வலியுறுத்தி இருக்கிறது.
The post உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துகிறது ரஷ்யா appeared first on Dinakaran.