பாதுகாப்பு பணிக்கு வந்த 3 காவல் வாகனங்களின் கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடாம்பேட்டை சுபாஷ் (21), நெய்வேலி வட்டம் 29 பகுதியை சேர்ந்த வித்தியாசாகர் (29), தொப்புளிக்குப்பம் ராஜாமணி (48), பெரிய கண்ணாடி தர்மராஜ் (21), முத்துகிருஷ்ணாபுரம் மணிமாறன் (19), பேர்பெரியாங்குப்பம் ஏழுமலை (32), துளாங்குறிஞ்சி கார்த்திக் (26) உள்ளிட்ட 26 பேரை நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு கைது செய்து, நெய்வேலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆத்தூர் செல்லியம்மன் நகர், கரமேடை சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்து கடலூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
The post என்எல்சி போராட்டத்தில் வன்முறை 2 சிறுவர்கள் உள்பட பாமகவினர் 28 பேர் கைது appeared first on Dinakaran.