அங்கேயும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால், உடனடியாக புறப்பட்டு வந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக பாடுபட்டவர். அவர் வீட்டுக்கு வந்த ஒருவரை கூட, சாப்பாடு போடாமல் அனுப்பியது இல்லை. ரொம்ப இளகிய மனம் படைத்தவர். கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால், தன்னோடு இருக்கின்ற எல்லாருக்கும், தனக்கு கிடைக்கின்ற அதே வசதிகள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப முயற்சி செய்தவர். மனித நேயத்துடன் இருந்த அரசியல்வாதி. விஜயகாந்த் நம்மிடம் இல்லை. துக்கத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை. உங்கள் மனதில் இருக்கும் துக்கம் தான் எங்கள் எண்ணத்திலும் உள்ளது. அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post நிர்மலா சீதாராமன் பேட்டி மனித நேயத்துடன் இருந்த அரசியல்வாதி விஜயகாந்த் appeared first on Dinakaran.