தற்போது நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூண்டு ஒரு கிலோ ரூ.300 வரை விலை போவதால், பூண்டு பயிருக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் மீண்டும் பூண்டு பயிரிட ஆயத்தமாகி வருகின்றனர். இதில், குறிப்பாக ஊட்டி அருகே உள்ள முத்தரைப்பாலாடா, கேத்தி பாலாடா, காட்டேரி போன்ற பகுதிகளில் தற்போது விவசாயிகள் பூண்டு பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post நீலகிரி மாவட்டத்தில் வெள்ளை பூண்டு பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.
