×

(செய்தி எண் 6)தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு பாலியல் வன்கொடுமை வழக்கில்

திருவண்ணாமலை, நவ.21: பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலி தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா கெங்கலமகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(48), கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர், அதே கிராமத்தை சேர்ந்த கணவனை இழந்த 40 வயது பெண்ணை கடந்த 2015ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், போளூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி திருமகள் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பரசுராமனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து, பரசுராமனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvannamalai ,court ,prison ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...