×

ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் வீடியோ வைரலால் பரபரப்பு ஆரணி அருகே ஏரியில் இரவில் அனுமதியின்றி மொரம்பு மண் திருடிய

ஆரணி, ஏப். 26: ஆரணி அருகே ஏரியில் இரவில் அனுமதியின்றி மொரம்பு மண் திருடிய ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலானது. ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் சாகுபடி குறையும் நிலங்களுக்கு வண்டல் மண் தேவை என்றால் சம்மந்தப்பட்ட விவசாயிகள் வருவாய்துறை மற்றும் கனிமவள அதிகாரிகள், தாசில்தாரிடம் மனு கொடுத்து பொதுப்பணித் துறையில் மூலம் ஏரிகளில் இருந்து பூஞ்சை மற்றும் நஞ்சை நிலங்களுக்கு வண்டல் மண், மொரம்பு மண் தேவைப்படும் விவசாயிகள் மண் எடுத்து பயன்படுத்தி கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையாக அனுமதிப் பெற்று ஏரிகளில் வண்டல் மண் எடுத்து நிலத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட வித்துவாதாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த சில வாரங்களாக இரவு, பகல் நேரங்களில் முறையாக அனுமதி பெறாமல், சிலர் ஜேசிபி மூலம் டிப்பர் லாரி, டிராக்டர்களில் இரவு, பகலாக திருட்டுதனமாக மொரம்பு, வண்டல் மண் எடுத்து படுஜோராக விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு, டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் ஏரிகளில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்து சென்று, லோடு ஒன்றுக்கு ₹3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், ஏரியில் மொரம்பு மண் திருட்டை தடுக்க நவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஏரியில் 2 டிப்பர் லாரி, ஒரு ஜேசிபி மூலம் இரவில் மொரம்பு மண் கடத்திய வாகனங்களை ஊர்பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அந்த மாபியா கும்பல் பொதுமக்களிடம் வாகனத்தை விடுமாறு கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு, பொதுமக்கள் வாகனங்களை விடாமல் சிறைபிடித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாபியா கும்பல்கள் பொதுமக்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் அந்த வீடியோவை வைத்து தலைமறைவாக உள்ள மாபியா கும்பல்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் வீடியோ வைரலால் பரபரப்பு ஆரணி அருகே ஏரியில் இரவில் அனுமதியின்றி மொரம்பு மண் திருடிய appeared first on Dinakaran.

Tags : JCP ,Morambu ,Samsunu Arani ,Arani ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி