×

வாகனம் மோதி வாலிபர் பலி

சூளகிரி, மார்ச் 10: சூளகிரி அருகே, மேலுமலை முதல் கோபசந்திரம் வரை சுமார் 30கி.மீ சாலை செல்கிறது. தொடர்ந்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. இச்சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. முக்கியமாக மேலுமலை முதல் கோபசந்திரம் வரை செல்லும் சாலையில், தினந்தோறும் விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை 5 விபத்துக்கள் நடந்தது. காலையில் கர்நாடக அரசு பஸ்சும், காரும் மோதிக்கொண்டதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே போல், டூவீலர் மோதிக்கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். மாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, பெங்களூருவில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு