×

உருக்காலை சிஐடியூ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 3: சம்பள பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் தாழ்த்தி வரும் செயில் நிர்வாகத்தை கண்டித்து, சேலம் உருக்காலை சிஐடியூ சங்கத்தினர் இரும்பாலை 2வது கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தியாகராஜன், நிர்வாகிகள் சண்முகம், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலுவையில் உள்ள தேசிய உருக்கு தொழில் இணை கமிட்டி கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் மயம், பங்கு விற்பனையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags : Situation demonstration ,CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு