×

ஆவின் பொதுமேலாளரை அடிக்க பாய்ந்த தொழிற்சங்க நிர்வாகி

சேலம், மார்ச் 3: சேலம் ஆவின் பொதுமேலாளரை, அண்ணா தொழிற்சங்க தலைவர் அடிக்க பாய்ந்ததால் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் இரும்பாலை ரோட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பொதுமேலாளராக விஜய்பாபு பணியாற்றி வருகிறார். இதில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கணேசன் என்பவர் பணி செய்கிறார். இவர் ஆவினில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் சரியாக வேலைக்கு வராமலும், பணி செய்யாமலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இது குறித்து ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, கணேசனிடம் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர். நீங்கள் சரியாக வேலை செய்வதில்லை என கேட்டுள்ளார். அப்போது ‘இதை கேட்க நீ யார்’ என்ற கணேசன், விஜய்பாபுவை அடிக்க பாய்ந்தார். இதனால் அங்கு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர் சண்முகம், கணேசன் மீது சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், இது குறித்து சக ஊழியர்கள் ஆவின் கூட்டுறவு இணையத்திற்கு புகார் மனு ஒன்று அனுப்பியுள்ளனர். அதில், ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் கணேசன், அதிகாரியை அடிக்க பாய்ந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கணேசன் ஏற்கனவே 2012-13ம் ஆண்டில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : union manager ,moneylender ,
× RELATED வாக்கு எண்ணிக்கை ஊழியர்களுக்கு...