×

557 பேர் ஆப்சென்ட் தரகம்பட்டி அருகே வேப்பங்குடியில் இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி

கடவூர், மார்ச் 3: தரகம்பட்டி அருகே உள்ள வேப்பங்குடியில் சுற்று வட்ட இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா, வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட துணை வட்டாச்சியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர், மன்ற பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நேரு இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட இளையோர் அலுவலர் பிரிஜெஸ் கவுசிக் கலந்து கொண்டு பேசினார். இதில் சுற்று வட்ட இளையோர் பாராளுமன்றத்தி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பின்படி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வின் நோக்கம் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களின் தேவைகள், பிரச்சனையை அறியச் செய்து அதற்கென தீர்வுகளை கண்டறிதல், சுற்று வட்டார பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சமூக பொருளாதார பிரச்சனைகளை அலசி ஆராயும் வகையில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு வசதிகளை இந்த மன்றத்தின் மூலம் செயல் படுத்த விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது. பெற்றோர் சங்கதலைவா; பாலுமுனியப்பன், வார்டு உறுப்பினர் போதும்பொண்ணு, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Weppankudy ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...