×

ஏற்காட்டில் தீ தடுப்பு விழிப்புணர்வு

ஏற்காடு, மார்ச் 2: ஏற்காட்டில், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்காடு ஆத்துப்பாலம் பகுதியில், மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதி மற்றும் காப்பி தோட்டங்களில் தீ தடுப்பு, மீட்பு துறை மூலம் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில், ஏற்காடு வனசரகர் சுப்பிரமணியன் முன்னிலையில், ஏற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் கனேசன் தலைமையில், தீயணைப்பு துறையினர் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து கிராம மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Tags : Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து