×

உத்தமபாளையத்தில் மோட்டார் அறைகளில் பாம்புகள் அடைக்கலம்

உத்தமபாளையம், ஜன.24: உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கட்டிடங்கள் உள்ளன. இங்குள்ள அலுவல் தேவைக்காக கிணறுகளில் மோட்டார் போட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதற்காக ஆபத்தான நிலையில் வயர்கள் போடப்பட்டுள்ளன. மோட்டார் பொருத்தப்பட்டுள்ள அறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இதேபோல் திறந்த வெளியில் இருப்பதால் உள்ளே செல்வதற்கு பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு காரணம், இரவு நேரங்களில் பாம்புகள் இந்த மோட்டார் அறைகளுக்குள் படுத்துகிடக்கிறது. இதேபோல் ஆபத்தான மழைக்காலங்களில் உள்ளே செல்லவே பணியாளர்கள் பயப்படுகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள்  கண்டு கொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``ஆபத்து நிறைந்த மோட்டார் அறைகள், மோசமான நிலையில் கிணறுகள், இடிந்து விழும் நிலையில் பில்டிங் என உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அமரும் அறைகளுக்கு பின்புறம் மிக மோசமாக உள்ளது. பாம்புகள் மோட்டார் அறைகள், கிணறுகளின் கம்பிகளில் படுத்துகிடக்கின்றன. பக்கத்தில் மகளிர் சுயஉதவிக்குழு பில்டிங், இன்ஜினியரிங் அலுவலகம் இருக்கிறது. இதனை சரிசெய்யாமல் அதிகாரிகள் எதற்காக உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது’’ என்றனர்.

Tags : motor rooms ,Uthamapalayam ,
× RELATED பெண் தற்கொலை