×

இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு

 

மூணாறு, ஏப்.24: கேரளா மாநிலம் இடுக்கி லோக்சபா தொகுதியில் இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. 2024 லோக்சபா தேர்தலில் இடுக்கி மாவட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்கள், பூமி சம்பந்தமான விஷயங்கள், பட்டா பிரச்னை, கட்டுமான பிரச்னை, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை, சாலை வசதி, சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் போன்ற பிரச்னைகளை முன்வைத்து வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வரும் வேட்பாளர்கள் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் அரசு இடுக்கி மாவட்டத்தில் நிலவும் வனவிலங்குகளின் தாக்குதல் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Idukki ,Munnar ,Lok ,Sabha ,Kerala ,2024 ,Sabha elections ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு