×

பெண் தற்கொலை

 

உத்தமபாளையம், ஜூலை 27: கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சென்றாயப்பெருமாள். இவரது மனைவி சுதா (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுதா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அரளி விதையை தின்று மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Uthamapalayam ,Pole Chendayapperumal ,Chudupatti Church Street ,Suta ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை