×

கலசபாக்கம் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் 65 பேர் பதவி ஏற்பு

கலசபாக்கம், ஜன.7: கலசபாக்கம் ஒன்றியத்தில் 44 ஊராட்சி தலைவர்கள், 21 ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றனர். ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் எர்னாமங்கலம் ஊராட்சி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 44 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, சொர்ணலதா (மட்டவெட்டு), ஆறுமுகம் (கடலாடி), ஆனந்தன் (சிங்காரவாடி), எழில்மாறன் (தென்மகாதேவமங்கலம்), முருகன் (மோட்டூர்), சண்முகப்பிரியா (பில்லூர்), நிலவழகி (மேல்வில்வராயன்நல்லூர்) உள்ளிட்ட 44 ஊராட்சி தலைவர்கள் பதவியேற்றனர். அதேபோல் கலசபாக்கம் ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுக, பாமக, சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நடந்ததால் கலசபாக்கம் பிடிஓ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : councilors ,panchayat leaders ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை