×

ஸ்டவ் தீப்பற்றி பெண் கருகி பலி

திருச்சி, டிச.27: திருச்சி அரியமங்கலம் மலைமேல்வீடு பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலித்ெதாழிலாளி. இவரது மனைவி செண்பகவல்லி(45). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஒரு மகள் உள்ளார். செண்பகவல்லி நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்டவ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை செண்பகவல்லி இறந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Woman karuki ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்