×

அழகு நிலைய உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, டிச.19:  கடலூர்  மாவட்டம், நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமுலு மகன் கந்தசாமி(41).  இவர் கிருஷ்ணகிரியில் அழகு நிலையம் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி சென்னை ரோடு  பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் ஆனந்த்(35) என்பவரும், அதே  பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டி தொடர்பாக, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில், நேற்று முன்தினம், கந்தசாமி தனது அழகு நிலையம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு  வந்த ஆனந்த், அவரது மனைவி அனிதா, ஊழியர்கள் கோகுல், ஷாகில் ஆகியோர்  கந்தசாமியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி, கிருஷ்ணகிரி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த  கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஆனந்த், அனிதா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,beauty salon owner ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...