×

நபிகள் நாயகம் பிறந்தநாள் 10ம் தேதி மதுக்கடைகள் பார்களை மூட உத்தரவு

சேலம், நவ.6: சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, வரும் 10ம் தேதி மிலாதுநபியை (நபிகள் நாயகம் பிறந்தநாள்) முன்னிட்டு, மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மேலும், அந்த நாளில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Muhammad ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...