×

ஓராண்டு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்

சேலம், ஏப்.24: நாமக்கல்லை சேர்ந்தவர் சந்திரசேகர் (50). இவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் சேலம் தாதகாப்பட்டி வந்தார். அப்போது ஒரு பெட்ரோல் பங்க் அருகே திரும்பியபோது, அந்தபகுதியில் டூவீலரில் ராமமூர்த்தி (75) என்பவர் வந்தார். சந்திரசேகரின் கார் ராமமூர்த்தி மீது மோதியதில் அவர் இறந்து விட்டார். இதுதொடர்பான வழக்கு சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்திரசேகருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து சந்திரசேகர், சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அரசு தரப்பில் துரைராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டு கீழ் நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு தண்டனையை உறுதி செய்தார்.

The post ஓராண்டு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Chandrasekhar ,Namakkal ,Salem Dadakapatti ,Ramamurthy ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை:...