×

தேன்கனிக்கோட்டையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை, நவ.6: தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், வட்ட செயலாளர் அனுமப்பா, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், செயற்குழு உறுப்பினர் இருதயராஜ், வட்ட செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா, நிலபட்டா வழங்க வேண்டும், 1997ம் ஆண்டு ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தை நில பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும், இருதுக்கோட்டை, பேளாளம், மணியம்பாடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டி கொடுக்க வேண்டும், இருதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும், உட்பட கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிவராஜ், ராஜா, சீனிவாசன், காத்தவராயன், பசுவராஜ், ராமன், வெங்கடேஷ், பிரேம்குமார், மாதேஷ், கமலம்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Tags : demonstration ,Agricultural Society ,Thenkanikotta ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்