×

மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல்

உளுந்தூர்பேட்டை, அக். 18: உளுந்தூர்பேட்டை அருகே உ.நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி லட்சுமி(60). இவர் சம்பவத்தன்று தனது வயலில் இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேல்(55) என்பவர் லட்சுமி
யின் நிலத்தின் வழியாக டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார், இது குறித்து கேட்ட லட்சுமியை,  தங்கவேல் மற்றும் அவருடன் வந்த சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகிறார்.

Tags : grandfather ,
× RELATED பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா,...