கூடலூர், அக். 10: கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் ஷர்மிளா வரவேற்புரையாற்றினார். கல்லூரி இணைச்செயலர் வசந்தன், முதல்வர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், பொன்ராம், சக்திவடிவேல் வாழ்த்துரை வழங்கினர். மதுரை பாத்திமா கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வரும், தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியை விசாலாட்சி சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘கபிலன் முதல் கண்ணதாசன் வரை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.