கம்பம், ஜன. 24: கம்பம், ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், அரசு வழங்கும் நிதியுதவியின் அடிப்படையில், குடிமக்கள் நுகர்வேர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முதல்வர் டாக்டர் ரேணுகா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தேனி பாண்டியராஜன், சின்னமனூர் மணிமாறன், உத்தமபாளையம் இளங்கோவன், கம்பம் சிரஞ்சீவி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நுகர்வேர் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார்.