×

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை,  அக். 4:  உளுந்தூர்பேட்டை அருகே பரவனந்தல் கிராமத்தை சேர்ந்த ரகுபதி  மனைவி ராஜலட்சுமி(45). நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டிவிட்டு தையல்  வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே  புகுந்த இரண்டு வாலிபர்கள் வீட்டில் திருட முயன்றுள்ளனர். அப்போது  அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து  பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாலிபர் சிக்கினார்.  அவரை பிடித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு ராஜலட்சுமி  கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிந்து விசாரணை  செய்ததில் பிடிபட்டவர் ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி(22)  என்று தெரியவந்தது. தப்பி ஓடிய
வரும் அதே கிராமத்தை சேர்ந்த  வைத்தீஸ்வரன்(25) என்பது தெரியவந்ததையடுத்து அவரை போலீசார் தேடி  வருகின்றனர். இந்த சம்பவம் பரவனந்தல் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி  உள்ளது.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்