×

வள்ளியூரில் ரயில்வே சுரங்க பாதை பணிகளை எம்பி ஆய்வு

வள்ளியூர்,அக்.1:  வள்ளியூரில் ரயில்வே சுரங்கபாதை பணிகளை  ஆய்வு செய்த ஞானதிரவியம் எம்பி  தற்காலிக மாற்று பாதையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம்  வலியுறுத்தினார்.வள்ளியூரில்  கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் சுரங்கபாதை பணி துவங்கப்பட்டது. 2வருடமாகியும் இப்பணிகள் ஆமை வேகத்தில்  நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிபட்டு வந்தனர். இப்பணிகளை தொடர தற்காலிக தார்சாலை பொதுப்பணித்துறையால்   அமைக்கப்பட்டது. தரமற்ற  முறையில்  அமைக்கப்பட்ட தார்சாலை சில நாட்களில் சிதிலமடைந்தது.மீண்டும் மறுசீரமைப்புக்கு பின் அமைக்கப்பட்ட சாலையில்   இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர்.  தற்போது பெய்த மழையினால் அந்த சாலையும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் அவதிகுள்ளாகின்றனர்.  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே  சுரங்கபாதை அமைக்கும் பணியை  ஞானதிரவியம்எம்.பி நேரில் பார்வையிட்டார். ரயில்வே பாதை அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆகியோர் எம்பியிடம்  மனு அளித்தனர். ரயில்வே சுரங்கபாதை பணிகள்  பாதியிலே நிறுத்தப்பட்ட  பகுதிகளை பார்வையிட்டு   தற்காலிக மாற்று பாதையை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறு ரயில்வே அதிகாரிகளிடம்   ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தினார். அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிப்பதாக தெரிவித்தனர்.

 ஆய்வின் போது ராதாபுரம் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஜீடு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், வள்ளியூர் நகர கழக செயலாளர் சேதுராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி, மாவட்ட திமுக பிரதிநிதி காதர்மைதீன், ஆச்சியூர்ராமசாமி, சி.பா மூர்த்தி, அன்பரசு, பேருர் கழக செயலாளர் நயினார், மாநில பேச்சாளர் பனிபாஸ்கர், ஒன்றிய திமுக அவைத்தலைவர் சிவராமகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் பேபி ஷிகிலா, பேரூர் கழக ராதாகிருஷ்ணன், ஒன்றிய கிளை துணை பொருளாளர் லெட்சுமணன், வர்ததகஅணி ரவி, 18வதுவார்டு சுரேஷ், பேரூர் கழக அமைப்பாளர் தில்லைராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு பொது அமைப்பாளர் சுரேஷ்பாக்கியம், ஒன்றிய இளைஞர் அணி மாடசாமி, ஆதி திராவிடர் நல அமைப்பாளர் பன்னீர் செல்வம், சட்டமேசே சேவியர், ஆலோசகர் தவசிராஜன், மற்றும் ம.நே.ம  கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தாவித், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சீராக் இசக்கியப்பன், மாவட்ட செயலாளர் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் சசி, மாவட்ட செயலாளர் குமாரசாமி,     கட்சி உறுப்பினர்கள் உட்பட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வணிகர் சங்க நிர்வாகிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Tags : Valliyur ,
× RELATED அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி வாக்கு சேகரிப்பு..!!