×

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

நெல்லை,ஏப்.23: நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர் ராஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஞானமூர்த்தி (24) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி ராஜூவின் மனைவியான லட்சுமி (34) என்பவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஞானமூர்த்தி, அவரது கணவரை எங்கே எனக் கேட்டு அவதூறாகப் பேசியதோடு மிரட்டல் விடுத்துச் சென்றாராம். பின்னர் இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திசையன்விளை எஸ்ஐ சனித் லியோன், மிரட்டல் விடுத்த ஞானமூர்த்தியை கைது செய்தார்.

The post பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Teen ,Nella ,Raj ,Appuja, Nella district ,Dizayanvilaya ,Gnanamurthi ,Raju ,Lakshmi ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் மீதான பாலியல் புகார்: ராஜ்பவனுக்குள் போலீஸ் வர தடை