×

பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது

பாவூர்சத்திரம், ஏப்.23: பாவூர்சத்திரம் எஸ்.ஐ. கார்த்திக் மற்றும் போலீசார் தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை சாலடியூர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 பைக்குகளில் வந்த 4 பேரை தடுத்துநிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இதையடுத்து அவர்களது பைக்குகளை சோதனையிட்டபோது ரூ.43 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை 310 மது பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது. இவற்றை சட்ட விரோதமாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவும் இவ்வாறு கடத்திச்செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து இவற்றை பறிமுதல் செய்த போலீசார், இவற்றை கடத்திவந்த ஆவுடையனூர் ஆவுடைசிவன்பட்டி தெருவைச் சேர்ந்த செல்வன் (52), லெட்சுமியூர் சந்தனக் குமார் பட்டி தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுடலை முருகன் (36), கல்லூரணி ராமசாமி கோவில் பகுதியை சேர்ந்த அன்பு ரோஸ் மகன் ஆனந்த் (35), கீழப்பாவூர் மூவேந்தர் தெற்குத் தெருவை சேர்ந்த ராமராஜன் (42) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

The post பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatram ,Bhavoorchatram SI ,Karthik ,Tenkasi-Nellai 4-lane ,Saladiyur ,
× RELATED பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...