×

தலைவாசல் மார்க்கெட்டிற்கு பூசணிக்காய் வரத்து அதிகரிப்பு

ஆத்தூர், செப்.26:  ஆயுதபூஜை பண்டிகை விற்பனைக்காக, தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. தலைவாசலில், தமிழகத்திலேயே மிகப்பெரிய தினசரி காய்கறி மார்க்கெட்  செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தலைவாசல், சிறுவாச்சூர்,  ஊனத்தூர், வீரகனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து  விவசாயிகள் காய்கறிகள், தேங்காய் உள்ளிட்டவற்றை விற்பனைக்கு கொண்டு  வருகின்றனர். ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, தலைவாசல்  தினசரி மார்க்கெட்டுக்கு பூசணிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, பூசணிக்காய் கிலோ ₹15க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறையும் என விவசாயிகள் தெரிவித்தனர். அதேபோல்,
தலைவாசல்  தினசரி மார்க்கெட்டில் நேற்று குடை மிளகாய் கிலோ ₹40க்கும், தக்காளி ₹20,  பெரிய வெங்காயம் கிலோ ₹50, சின்னவெங்காயம் கிலோ ₹50க்கும், இஞ்சி கிலோ  ₹90க்கும், முட்டைகோஸ் ₹30க்கும் விற்பனையானது

Tags :
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது