×

போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன், பணம் கொள்ளை

போச்சம்பள்ளி, ஜூன் 13: போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன், ₹20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்(45). இவருடைய மனைவி சந்திரா. இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மதியம் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் 7பவுன் தங்க நகைகள், ₹20ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசில் சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pochampalli 7 ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு