×

மரக்கன்று நடும் விழா

அம்பை, ஜூன் 7:  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அம்பை நகராட்சி சார்பில் ஆணையாளர் பிரேம் ஆனந்த் அறிவுரைபடி அம்பை எழில் நகர் குடியிருப்பு பூங்கா பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.  நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் தலைமை வகித்தார். சுப்புராஜ் முன்னிலை வகித்தார். நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஆறுமுக நயினார் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் எழில்நகர்  பூங்காவில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் பசுமை அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நகராட்சி சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பணி மேற்பார்வையாளர் வீரபாகு, வெங்கட்ராமன், சரண்யா, மாரியப்பன், நகராட்சி பணியாளர்கள், பசுமை தோழர் அறக்கட்டளை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர் மாரியப்பன் உள்ளிட்ட எழில் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Planting Festival ,
× RELATED நீடாமங்கலம் ரிஷியூரில் பாரம்பரிய பூங்கார் நெல் நடவு திருவிழா