×

ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் மழையில் வீணாகும் ஜன்னல், கதவுகள்

ஆத்தூர், ஜூன் 7: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திரா குடியிருப்பு திட்ட ஜன்னல், கதவுகள், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 கிராம ஊராட்சிகளில், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டி தர தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, ஊராட்சி ஒன்றியத்தில் ஜன்னல் மற்றும் கதவுகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்க வேண்டிய ஜன்னல் மற்றும் கதவுகள், ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், காலி இடத்தில் நீண்ட நாட்களாக பயனாளிகளுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ளது. இவை மழையிலும், வெயிலிலும் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. எனவே, இவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,Attur Union ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...