×

மதுபோதையில் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் ராணுவ வீரர் தற்கொலை

தேனி, ஜூன் 5: தேனி மாவட்டம், மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் சுரேந்திரன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் சேர்ந்த இவர், இரண்டு மாதங்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தி விட்டு ஊர் சுற்றிய இவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சுரேந்திரன், தேனிக்கு வந்து புது பஸ்ஸ்டாண்ட் அருகே மதுவுடன் விஷம் கலந்து குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : soldier ,suicide ,town ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...