×

டாஸ்மாக் பார் ஊழியரிடம் வழிப்பறி வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி


சென்னை, மே.28: சென்னை கோயம்பேடு பகுதியில் டாஸ்மாக் பார் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பிய வாலிபரை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்ைத சேர்ந்தவர் பாலமுருகன் (28). சென்னை கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் தங்கி, வேலை செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பாலமுருகன், கோயம்பேடு நியூகாலனி சந்திப்பு வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், பாலமுருகனை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

அதற்கு, பாலமுருகன், பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், திடீரென பாலமுருகன், சட்டை பையில் இருந்து ₹700ஐ பறித்து கொண்டு ஓடினார். இதனால், அதிர்ச்சியடைந்த பாலமுருகன், அலறி கூச்சலிட்டபடி விரட்டி சென்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன் (26) என தெரிந்தது. அவரிடம் இருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags :
× RELATED சட்டவிரோத செயல்களில்...