மேட்டூர், மே 21: மேட்டூர் அருகே தங்கமாமுனிபட்டினத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(48). இவர் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், ேபாலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு தேர்தல் பணிக்காக, தனது வீட்டில் இருந்து, ஆப்பக்கூடலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று, கொண்டிருந்தார். அப்போது நவப்பட்டி அருகே சென்ற ேபாது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்து கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு சுஜிதா என்ற மனைவியும், சஞ்சை, சஞ்சனா என்ற 2குழந்தைகளும் உள்ளனர். விபத்து குறித்து, மேட்டூர் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.