திருவெறும்பூர். மே 10: திருவெறும்பூர் அருகே எறும்பீஸ்வரர் கோயில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோயில் உள்ள நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா 8ம்தேதி அனுக்கை, விக்னேஷ்வரர் உள்ளிட்ட யாக பூஜைகளுடன் தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை முறைப்படி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் பல்லக்கிலும் மாலை சேஷ வாகனத்திலும், அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 14ம் தேதி காலை 10.30 மணி அளவில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17ம் தேதி திருத்தேரும், 20ம் தேதி தெப்பஉற்சவம், 21ம் தேதி திருவிழா முடிவடைகிறது. விழாவில் திருவெறும்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சிவபக்தர்களும் கலந்துகொள்வர்.