×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு கருணை கொலை செய்யக்கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த திருநங்கையால் பரபரப்பு


திருவண்ணாமலை, ஏப்.30: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு கருணை கொலை செய்யக்கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை அண்ணாநகர் 9வது தெருவை சேர்ந்தவர் ராதிகா. திருநங்கை. இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் 3 மணியளவில் மண்ணெண்ணெய்ய கேனுடன் வந்தார். தான் தீக்குளிக்கப்போவதாகவும், கலெக்டரிடம் தன்னை கருணை கொலை செய்யக்கோரி மனு கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு இருந்த போலீசார் திருநங்கை ராதிகாவிடம், `கலெக்டர் அலுவலகத்துக்குள் மண்ணெண்ணணெய் கேன் கொண்டு செல்லக்கூடாது'' என்று கூறி, அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர். பின்னர் அவரை கலெக்டர் அலுவலத்துக்கு மனு கொடுக்க அனுமதித்தனர். தொடர்ந்து அவர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

மனுவில் அவர் கூறி இருப்பதாவது:நான் இந்த மாவட்டத்தின் தலைவியாக(நாயக்) இருக்கிறேன். என் குரு குப்பம்மாளுக்கு பிறகு எனக்கு இந்த பட்.டம் கிடைத்துள்ளது. வேலூரில் நாயக்காக இருக்கும் கங்கா என்பவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ₹15 லட்சம் வாங்கிக்கொண்டு தலைவியாக உட்கார வைக்கிறார். அவ்விதமாக என்னிடம் இருந்த என்பட்டத்தை பிடுங்கி, இதே ஊரில் இருக்கும் அவருடைய மகள் நிஷாவுக்கு பட்டத்தை விற்க முயற்சிக்கிறார். கடந்த 4 மாதங்களாக எனக்கு பலவித தொல்லைகளை கொடுத்து திருநங்ககைளில் இருந்து என்னை பிரித்து அசிங்கப்படுத்தி தனிமையாக்கி விட்டார். எனவே எனது வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே யாருமற்ற அனாதையாக்கப்பட்ட என்னை கருணை கொலை செய்துவிட வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Tags : collector ,Thirumannamalai ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...