துறையூர், ஏப். 26: துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள், ரூ. 43 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது.
துறையூர் அருகே கரட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி, விவசாயி. இவர் வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் துறையூருக்கு சென்றுள்ளார். இவரது மனைவி ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் இரும்புக் கம்பியைக் கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த செயின், தோடுகள் என மொத்தம் 11 சவரன் நகைகளையும், ரூ.43ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய சின்னதம்பி வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 11 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சின்னத்தம்பி அளித்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.