×

கல்லூரி பேராசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு

கிருஷ்ணகிரி, ஏப்.25:  கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வந்தவர் பழனிவேலு. இவர் ஓய்வுபெற்றதையடுத்து, இவருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. பேராசிரியர் மாரியப்பன் வரவேற்றார். இதில் பேராசிரியர்கள் மாது, ராஜேந்திரன், கீதா, சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பணிநிறைவு பெற்ற பேராசிரியர் பழனிவேலு மற்றும் அவரது மனைவிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செய்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பேராசிரியர் பழனிவேலு ஏற்புரையாற்றினார். பேராசிரியர் பேகம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் திலகவதி நன்றியும், பேராசிரியர் தனராசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் முன்னாள் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : completion ,
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா