×

முசிறி தொகுதியில் கோரைப்பாய் தொழிற்சாலை அமைத்து ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அதிமுக வேட்பாளர் சிவபதி தேர்தல் பிரசாரம்

தா.பேட்டை, ஏப்.12: முசிறி தொகுதியில் அரசு கோரைப்பாய் தொழிற்சாலை அமைத்து அனைத்து பொதுமக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளர் சிவபதி, முசிறி ஒன்றியத்தில் நேற்று பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.முசிறி அடுத்துள்ள  உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், சாலப்பட்டி, திரணியாம்பட்டி,  தொட்டியப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்று  வாக்குகள் சேகரித்தார். அப்போது வேட்பாளர் சிவபதி பேசும்போது, முசிறி காவிரி ஆற்றில் கொரம்பு அமைக்கப்படும். கோதாவரி நதியை காவிரியுடன்  இணைக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். நதிகள் இணைப்பு மூலம் முசிறி  தொகுதி விவசாயிகள் வாழ்வு மேம்பட பாடுபடுவேன். முசிறியில் கோரைபாய்  தொழிற்சாலைகள் அரசு சார்பில் அமைக்கப்பட்டு ஏழை தொழிலாளர்களுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

கிராமப்புறங்களில் பெண்கள், இளைஞர்கள், தொழில்  தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கிட முயற்சி எடுப்பேன். முசிறி தொகுதியில்  குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையிலும் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரவும்  மத்திய அரசு நிதியை பெற்று குடி மராமத்து பணிகள் மூலம் நீர்வளத்தை காத்திடவும்  பாடுபடுவேன் என்று கூறினார்.
வேட்பாளர் சிவபதியை அதிமுக நிர்வாகிகள் பட்டாசு  வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்தனர்.

 இதில் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி, முசிறி எம்எல்ஏ  செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ்  தங்கவேல், தேமுதிக மாவட்ட செயலாளர் குமார், உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.தொடர்ந்து துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னாடு, தென்புறநாடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சிவபதி பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது தென்புறநாட்டில் ஜவ்வரிசி தயாரிப்பதற்கான மரவள்ளி கிழங்குகள் பதப்படுத்தும் கிடங்குகள் அமைக்கப்படும் என்று கூறினார்.

Tags : Sivapati ,factory ,Musiri ,
× RELATED திருவள்ளூர் காக்களூர் சிப்காட்...