×

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

கிருஷ்ணகிரி, ஏப்.12: சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜூனா, தயான்சந்த் மற்றும் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டு துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்களுக்கு பல்வேறு விருதுகள், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இவ்வாண்டிற்கான அர்ஜூனா விருது, தயான்சந்த் விருது மற்றும் ராஜீவ்காந்தி கேல்ரத்னா ஆகிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் சம்பந்தப்பட்ட விருதினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ, ஈ.வெ.ரா.சாலை, நேரு பூங்கா, சென்னை 600084 என்ற முகவரிக்கு வருகிற 25ம் தேதிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Tags : athletes ,
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...