×

சூளகிரி அருகே எருதாட்டம் கோலாகலம்

சூளகிரி, மார்ச் 8:  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அத்திமுகம் கிராமத்தில் எருதாட்டம் நடைபெற்றது. சூளகிரி முன்னாள் சேர்மன் மது (எ) ஹேமநாத் தலைமையில், முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடங்கி வைத்தார். எருதாட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் அத்தி முகம், நரசிபுரம், சூளகிரி, பேரண்ட பள்ளி, ஓசூர் போன்ற பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருதுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியினை ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். 600-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எருதுகளை மடக்கி பிடித்தனர்.

Tags : colony ,Sulagiri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி