×

மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ

மேட்டூர், மார்ச் 7: மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால், புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். மேட்டூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பகைள், நகராட்சிக்கு உட்பட்ட சர்கார் தோட்டம் என்ற பகுதியில், குவித்து வைக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய முடியாமல் உள்ளது. ஆனாலும், அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள், பொதுமக்களில் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பது வழக்கம். நேற்று பிற்பகல், சேகரித்து வைக்கப்பட்ட குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரே புகை மூட்டமாக மாறியது.

கரும்புகை எழும்பியதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். தீ கொளுந்து விட்டு எரிவதை கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதேபோல், மேட்டூர் அனல் மின்நிலைய பகுதியில், மின் கம்பி அறுந்து விழுந்து, புற்கள் மீது பட்டு தீப்பற்றியது. இதனால் மேட்டூர் ஆர்எஸ் 101 கிலோ வாட் மின் நிலையத்தில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை