×

காதப்பாறை வெண்ணெய்மலை சாலையோரத்தில் குப்பை குவியலால் சுகாதார கேடு

கரூர், பிப். 27: காதப்பாறை வெண்ணெய்மலை சாலையோரம் குப்பை குவியலால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கரூர் நகராட்சியை அடுத்து உள்ள ஊராட்சி காதப்பாறை. நாளுக்குநாள் குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள், பெருகி கொண்டே வரும் பகுதி. கல்லூரிகள், பள்ளிகள் என இந்த ஊராட்சியில் அதிகம் உள்ளது. கிட்டத்தட்ட நகர பகுதியை போன்று உள்ள இந்த ஏரியா பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் இருக்கிறது. குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. போதுமான சுகாதார பணியாளர்களும் இல்லை. கரூர் வெண்ணெய்மலை சாலையில் குப்பைகள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. பஞ்சாயத்து அலுவலர்கள் இதனை அகற்றாததால் மலைபோல குவிந்து விட்டது.

போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் மலைபோல குவிந்துகிடக்கிறது. அவ்வப்போது மழை தூறல் விழுவதால் மக்கிப்போய் கொசுத்தொல்லை போன்ற சுகாதாரகேட்டில் சிக்கி மக்கள் சிரமப்படுகின்றனர். வரிமட்டும் கேட்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகளை செய்வதில்லை. குறிப்பாக குப்பைகளை குவிய விட்ட பின்னரே அப்புறப்படுத்துகின்றனர். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kavarpara Vennemalai ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...