×

பிக்கனஅள்ளியில் பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்

காரிமங்கலம். பிப்.12: காரிமங்கலம் அருகே பிக்கனஅள்ளியில் பயன்பாடின்றி காணப்படும் சேவை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க ேவண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பிக்கனஅள்ளி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வருமான வரி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, பிக்கனஅள்ளியில் கடந்த 2014- 2015ம் ஆண்டு ₹14.50 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 3 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சேவை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Service center ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...