×

மொபட் திருடிய வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை, பிப். 1: உளுந்தூர்பேட்டை அருகே கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (45). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்த போது மொபட்டை 2 பேர் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக சுப்ரமணியன், அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை துரத்தி சென்றதில் ஒருவர் சிக்கினார். பின்னர் அவரை திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சுப்ரமணியன் திருட்டு சம்பவம் குறித்து புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிந்து பிடிபட்ட வாலிபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுகுமார் (18) என்பது தெரியவந்துள்ளது. இவர் வேறு ஏதாவது திருட்டு வழக்கில் தொடர்பு உடையவரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mobt ,
× RELATED மொபட்டில் இருந்து கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு