×

மொபட்டில் இருந்து கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 4:   திருவெண்ணெய்நல்லூர் அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பாவடை மகன் சக்திவேல்(45), விவசாயி. இவர் கடந்த 31ம் தேதி மாலை அவருக்கு சொந்தமான மொபட்டில் திருக்கோவிலூர்- திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சென்றுள்ளார். அப்போது சுந்தரேசபுரம் முருகன் கோயில் அருகே சென்றபோது, திடீரென சக்திவேல் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சக்திவேல் மகள் அனிதா(21) திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பத்மா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...