×

பெண் இன்ஜினியரை மொபட்டுடன் தள்ளிவிட்டு செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

சென்னை: கோவையை சோந்தவர் தேவி (29). இன்ஜினியர். அடையாறு தனியார் பெண்கள் விடுதியில் தங்கி சின்னமலை தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 7ம் ேததி இரவு பணி முடிந்ததும் மொபட்டில் தேவி அடையார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அண்ணா பல்கலைக்கழகம் அருகே, சர்தார் பட்டேல் சாலையில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் தேவியின் மொபட்டை காலால் உதைத்தனர். இதில், நிலை தடுமாறி தேவி மொபட்டில் இருந்து விழுந்தார். உடனே பைக் ஆசாமிகள் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு மாயமாகினர். இந்த சம்பவத்தில் தேவிக்கு முகம் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. சக வாகன ஓட்டிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தேவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் முன்னால் செல்லும் தேவியின் மொபட்டை உதைத்து தள்ளி செல்போன் பறித்து சென்றது பதிவாகி இருந்தது. அவர்களின் புகைப்படங்களை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வேளச்சேரி டிஎன்எச்பி காலனி 1வது மெயின் ரோட்டை சோந்த யோகேஷ்வரன் (19) மற்றும் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 11வது குறுக்கு தெருவை சேர்ந்த பிங்கி (எ) அருண்குமார் (19) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேர் மீது ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரை தனிப்படை போலீசார் ேநற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் வழிப்பறிக்காக பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
* அயனாவரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பையா (47). இளநீர் வியாபாரி. மேலும், 98வது வட்ட மேற்கு பகுதி பாமக செயலாளர். திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் முருகன் (31). தண்ணீர் கேன் வினியோகஸ்தர். 98வது வட்ட கிழக்கு பகுதி பாமக செயலாளர்.
குடிநீர் கேன் வாங்கியதில் 1,300 சுப்பையா கடன் வைத்திருந்தார். இதனால் நேற்று இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டுக்கட்டையால் சுப்பையாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை நேற்று கைது செய்தனர்.
* சோழிங்கநல்லூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சுதாராணி (25). தனியார் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு வேலை முடிந்து சுதா ராணி வீட்டுக்கு திரும்பியபோது பைக்கில் வந்த 3 பேர் செல்போனை  பறித்து சென்றனர்.
செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சுதா ராணி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்த ஐடிஐ மாணவன் அருண்குமார் (19) மற்றும் 2  சிறுவர்கள் என தெரிந்தது. எனவே அருண்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 2 சிறுவர்களை கெல்லீஸ் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
அதேபோல் துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது கண்ணகிநகரை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பதும்,  தனியாக நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறித்ததும் தெரிந்தது. எனவே 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.செல்போன் பறித்ததும் தெரிந்தது. எனவே 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
* தரமணி, எம்ஜிஆர் ரோடு, காந்தி தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி (67). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சாப்பாட்டுக்காக ஜெயலட்சுமிகடையை பூட்டி வீட்டுக்கு சென்றார்.
மீண்டும் திரும்பி வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 25 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம்
1 லட்சம் கொள்ளை சென்னை கோயம்பேடு மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து மணலி நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கல்யாணி (35) என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். பஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் சென்றபோது மர்ம ஆசாமிகள் கல்யாணி வைத்திருந்த கைப்பையை கிழித்து, ₹1 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகையை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து கோயம்

Tags : men ,engineer ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...