×

பாமக ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி, ஜன.30: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பாமக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு, இளைஞர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பொறுப்பாளர்கள்,  பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அந்த  பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் அளிப்பதோடு,  ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருக்க வேண்டும். தேர்தல் கூட்டணி  குறித்து பாமக தலைமை முடிவெடுக்கும் என்றார்.
கூட்டத்தில், பாமக மாநில துணைப் பொதுச் செயலர் மா.செல்வராஜ், இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ராசா.சங்கர், மாவட்டச் செயலர் குபேந்திரன், இளைஞர் அணிச் செயலர் காசி.ஏகாம்பரம்,  தலைவர் காளிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Manga Advice Meeting ,
× RELATED சட்டவிரோத செயல்களில்...