×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்

ஓசூர், ஜன.29:  ஓசூர் ரயில் நிலையம் அருகில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ேநற்று தொடர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தின்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, குறைந்த பட்ச ஊதியமாக ₹20 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

திறமைக்கேற்ற சமூக பாதுகாப்பான வேலை கொடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், செவி சாய்க்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நாகேஷ்பாபு முன்னிலை வகித்தார். வட்ட தலைவர்  ஆனந்தன் வரவேற்று பேசினார். இந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags : Democrats ,state governments ,
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...