×

தாரமங்கலம் பகுதியில் தாபா ஓட்டல்களில் மது விற்பனை தாராளம்

ஓமலூர், டிச.18: தாரமங்கலம் பகுதியில் உள்ள தாபா ஓட்டல்களில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடக்கிறது. தாரமங்கலம்  வட்டாரத்தில் தாபா ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. ஓமலூர் செல்லும் சாலையில் 3 தாபாக்களும், சங்ககிரி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய சாலைகளில் தலா 5  தாபாக்களும் உள்ளன. இந்த தாபாக்களில் கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் டாஸ்மாக் மதுபானங்களும், வெளிமாநில மது பாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாரளமாக மது அருந்த அனுமதிப்பதால்,  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குடிமகன்கள், வெளிமாநில லாரி டிரைவர்கள் இங்கு மது அருந்துகின்றனர். இது, நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்கள் அதிகரிக்க காரணமாகவும் உள்ளது. இதுபோன்ற மது விற்பனை செய்யும் பார்கள் மீது, மற்ற தாபா ஓட்டல் உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தால், அவர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hotels ,area ,Taramangalam ,
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...